ஒடிசா மாநிலத்தில் பானி புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது.கடந்த 3-ஆம் தேதி பானி புயல் பூரி நகர் அருகே அதிதீவிர புயலாகக் கரையைக் கடந்த நிலையில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. புயல் காரணமாக ஒடிசாவின் 14 மாவட்டங்களில் ஒரு கோடியே 64 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.